இலங்கையின் பரிதாப நிலை - மத்திய வங்கி அதிர்ச்சித் தகவல்
இலங்கைசெய்திகள்

இலங்கையின் பரிதாப நிலை – மத்திய வங்கி அதிர்ச்சித் தகவல்

Share

இலங்கையின் பரிதாப நிலை – மத்திய வங்கி அதிர்ச்சித் தகவல்

இலங்கை அரசாங்கம் வருடத்திற்கு 100 ரூபாய் வருமானத்தைப் பெறும் போது, ​​118 ரூபா கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அர்ப்பணிக்க வேண்டிய நிலையில் உள்ளதென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியினால் வெளியிட்டப்பட்ட ஆய்வு அறிக்கைக்கு அமைய இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானியா ஊடகமான பிபிசி வானொலியில் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மத்திய வங்கி அறிக்கைக்கமைய, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக இலங்கையின் நிலுவையிலுள்ள கடன் 118.7 சதவீதம் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், 2032 ஆம் ஆண்டளவில் இந்த கடன் சதவீதத்தை 95% ஆக குறைக்க திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் அதன் பிற செலவுகள் இருந்த போதிலும் நாட்டின் கடன் தவணை மற்றும் கடன் வட்டியை செலுத்துவதற்காக வருடாந்த அரசாங்க வருவாயில் 70 சதவீதத்தை செலவிட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 6960c64c2110e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முகாம்களில் வசிக்கும் மக்களுக்காக 2,500 புதிய வீடுகள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிரடி அறிவிப்பு!

இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து, தற்போதும் முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களுக்காக 2,500 நிரந்தர வீடுகளை...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்குளியில் 10 வாள்கள் மற்றும் ஹெரோயினுடன் கைது: பாதாள உலகக் கும்பல் தலைவனின் ஆதரவாளர் சிக்கினார்!

மட்டக்குளி பகுதியில் போதைப்பொருள் மற்றும் பாரிய அளவிலான வாள்களுடன் சந்தேகநபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....

anura kumara dissanayake 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தலா 50 இலட்சம் ரூபாய; புயலால் வீடுகளை இழந்தவர்களுக்குப் புதிய வாழ்வு – ஜனாதிபதி அநுரகுமார!

‘டித்வா’ புயலினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களது முந்தைய வாழ்க்கையை விடச் சிறந்ததொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும்...

Douglas Devananda
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை: கம்பஹா நீதிமன்றம் உத்தரவு!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கம்பஹா நீதிமன்றத்தினால் இன்று (09)...