Untitled 1 58 scaled
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்துக்கு பாரிய நெருக்கடி ஏற்படும் – எச்சரிக்கை

Share

அஸ்வெசும நலன்புரி செயற்திட்டத்தில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன. ஏழ்மையில் உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

குறைப்பாடுகள் விரைவாக திருத்திக் கொள்ளப்பட வேண்டும் இல்லாவிடின் அரசாங்கத்துக்கு பாரிய நெருக்கடி ஏற்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

சமுர்த்தி நலன்புரி செயற்திட்டம் அரசியல் நோக்கத்துக்காகவே வழங்கப்படுகிறது என எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் சமுர்த்தி நலன்புரி வழங்கல் சிறந்த முறையில்

முன்னெடுக்கப்பட்டது.தற்போது எதிர்க்கட்சியில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆட்சியில் இருந்த போது சமுர்த்தி நலன்புரி செயற்திட்டத்துக்கு எதிராக செயற்படவில்லை.

குறுகிய நோக்கத்தை அடிப்படையாக கொண்டே சமுர்த்தி நலன்புரி செயற்திட்டம் விமர்சிக்கப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில் அரசாங்கம் அறிமுகப்படுத்திய அஸ்வெசும நலன்புரி செயற்திட்டம் சமூக கட்டமைப்பில் பாரிய முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்வெசும நலன்புரி செயற்திட்டத்தில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன.ஏழ்மையில் உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆகவே குறைப்பாடுகள் விரைவாக திருத்திக் கொள்ளப்பட வேண்டும் இல்லாவிட்டால் அது அரசாங்கத்துக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும்.

ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெறவுள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளோம்.
குறைப்பாடுகளுடன் இந்த நலன்புரி செயற்திட்டத்தை அமுல்படுத்த முடியாது என்றார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...