thuoc thiet yeu.tmb 1024v
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துப்பொருள் உதவி

Share

இலங்கை முகங்கொடுத்திருக்கும் மருந்துப்பொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கும், அத்தியாவசிய மருந்துப்பொருள் கொள்வனவுக்கு உதவுவதற்குமென ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் முன்னெடுக்கப்படுவரும் நடவடிக்கைக்கு அவசியமான உதவிகளை மிச்செலின் அறக்கட்டளை வழங்கியுள்ளது.

அதன்படி மிச்செலின் அறக்கட்டளையின் உதவி மூலம் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மருந்துப்பொருட்கள் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூஸா குபோடா மற்றம் மிச்செலின் லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி கொன்ராட் ப்ரினியேர்ஸ் ஆகியோரால் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

உரியநேரத்தில் வழங்கப்பட்டுள்ள இவ்வுதவி குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, ‘இந்த இக்கட்டான சூழ்நிலையில் மருந்துப்பொருட்களுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ள இவ்வுதவிக்கு நன்றி கூறுகின்றோம்’ என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கையின் சுகாதாரத்துறையை வலுப்படுத்துவதை முன்னிறுத்திய நடவடிக்கைகளை எளிதாக்குவதில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் பங்களிப்பு குறித்து சுட்டிக்காட்டிய அச்செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூஸா குபோடா, ‘இலங்கை மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக மிச்செலின் அறக்கட்டளை வழங்கிய உதவிகளுக்கு நன்றி கூறுகின்றோம். அதேவேளை எமது விரிவான உலகளாவிய கொள்முதல் வலையமைப்பின் ஊடாக மருந்துப்பொருட்களைத் துரிதமாகக் கொள்வனவு செய்யவும், விநியோகிக்கவும் முடிந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...