6ntdtd2v5FAp7V92QEgj
அரசியல்இலங்கைசெய்திகள்

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை! ஏற்க மறுத்த தமிழ் தரப்புகள்: சுகாஷ் காட்டம்!

Share

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை! ஏற்க மறுத்த தமிழ் தரப்புகள்: சுகாஷ் காட்டம்!

அரச எடுபிடிகளான தமிழ் அரசியல் தலைமைகள் சிலர், நடிப்பதையும் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று வாயளவில் கூறி ஐக்கிய நாடுகள் சபையில் உள்ளகப் பொறிமுறைக்கு உடன்படுவதையும் தமிழ் மக்கள் இனியும் கண்டுபிடிக்கமாட்டார்களென்று அரச எடுபிடி தமிழ் தலைமைகள் கருதினால், அது அவர்களின் முட்டாள்தனமே என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்று கனேடிய பிரதமர் கூறியிருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்,இது தொடர்பில் க.சுகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கச் சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டுமென்பதையும் 2010 முதல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது.

இதன்போது, தமிழ்த் தரப்புக்கள் அவற்றை மறுதலித்து, இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசைக் காப்பாற்றும் வகையில் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை அல்லவென்றும் அது வெறும் யுத்தக் குற்றமென்றும் இனப்படுகொலைக்கு ஆதாரங்களில்லை என்றும் கூறி தமிழினத்தைக் காட்டிக் கொடுத்தது.

தற்சமயம் கனேடியப் பிரதமரே “இலங்கையில் நடந்தது இனப்படுகொலை” என்று கூறியுள்ளதால், எங்கே தமது காட்டிக்கொடுப்புக்களைத் தமிழ் மக்கள் கண்டுபிடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில், அரச எடுபிடிகளான தமிழ் அரசியல் தலைமைகள் சிலர் நடிப்பதையும் இனப்படுகொலை என்று வாயளவில் கூறி ஐக்கிய நாடுகள் சபையில் உள்ளகப் பொறிமுறைக்கு உடன்படுவதையும் வாக்குகளுக்காக முள்ளிவாய்க்காலுக்குச் சென்று விளக்கேற்றி வருவதையும் தமிழ் மக்கள் இனியும் கண்டுபிடிக்க மாட்டார்களென்று அரச எடுபிடித் தமிழ்த் தலைமைகள் கருதினால், அது அவர்களின் முட்டாள்தனமே.”என தெரிவித்துள்ளார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...