24 665d3768c1528
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சை பெறுபேற்றினால் மாணவன் விபரீத முடிவு

Share

உயர்தரப் பரீட்சை பெறுபேற்றினால் மாணவன் விபரீத முடிவு

குருநாகலில் (Kurunegala) உயர்தரப் பரீட்சையில் (G.C.E A/L Exam) பல்கலைக்கழக அனுமதிக்கு போதுமான பெறுபேறுகள் கிடைக்காததால் மனமுடைந்த மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி அண்மையில் வெளியான பெறுபேறுகளைப் பெற்ற மாணவனே தவறான முடிவை எடுத்துள்ளார்.

குறித்த மாணவன் 2022 ஆம் ஆண்டு முதல் தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியதாகவும், பல்கலைக்கழக அனுமதி பெறாத காரணத்தினால் கடந்த வருடம் இரண்டாவது தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவனுக்கு ஒரு திறமைச் சித்தி (C) மற்றும் இரண்டு சாதாரண சித்திகள் (S) கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பரீட்சைப் பெறுபேற்றினை தாங்கிக் கொள்ள முடியாத மாணவன் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...