சங்கானை மருத்துவமனை – வெளிநோயாளர் பிரிவுக்கு பூட்டு!!
சங்கானை பிரதேச வைத்தியசாலையின் மருந்தகத்தில் பணிபுரியும் மருந்தாளர்களுக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து வைத்தியசாலையின் மருந்தகம் மற்றும் வெளிநோயாளர் பிரிவு என்பவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
மருந்தாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய ஊழியர்களைத் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் தரப்பு தெரிவிக்கின்றது.