உடனடி ஊரடங்கு ஆயிரம் உயிர்களைக் காக்கும்!
நாட்டில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டால் 20 நாள்களுக்குள் குறைந்தது ஆயிரத்து 200 இறப்புகளைத் தடுக்க முடியும் என்று சமூக மருத்துவ பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முடிவெடுப்பதில் 5 நாள்கள் தாமதமானாலும் அது 700 பேரின் விருப்பமில்லாத மனிதக்கொலை எனப் பதிவிட்டுள்ளார்.
பேராசிரியர் அகம்பொடி கொரோனா அதிகரிப்பு வரைபடங்களை பதிவிட்டு இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.