இலங்கை

எகிறும் கொவிட் மரணங்கள் – நேற்று மட்டும் 118 பேர் பலி!

Published

on

எகிறும் கொவிட் மரணங்கள் – நேற்று மட்டும் 118 பேர் பலி!

இலங்கையில் கொரோனாத் தொற்றால் மேலும் 118 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் இன்று செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 79 ஆண்களும், 39 பெண்களும் உள்ளடங்குகின்றனர் என்று அரச தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 17 பேர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் 101 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புக்களுடன் இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 340 ஆக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version