19 10
இலங்கைசெய்திகள்

200 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமங்கள் தடை

Share

200 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமங்கள் தடை

பல்வேறு முறைகேடுகள் காரணமாக 200 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும் 400 நிறுவனங்களின் உரிமங்கள் இடைநிறுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கேகாலை மாவட்ட சபை உறுப்பினர் ராஜிகா விக்ரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர், இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு முதல் 464,132 பெண் தொழிலாளர்கள் வெளிநாடு சென்றுள்ளனர்.

இவர்களில் 3 லட்சத்து 1188 வீட்டு வேலைக்காகவும் ஏனைய ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 944 பேர் வேறு வேலைகளுக்காகவும் சென்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்களில் 3 லட்சத்து 62904 பேர் பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் ஒரு லட்சத்து199 பேர் பயிற்றப்படாத தொழிலாளர்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...