6 1
இலங்கைசெய்திகள்

20 வருட சிறைக்காலம்! சிறையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள மகிந்தானந்த

Share

இந்த வாரம் முறையே 20 மற்றும் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலையின் அச்சிடும் பிரிவில் பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளும் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளும் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் ‘சேப்பல்’ பிரிவின் பிரதான பிரிவில் இருவரும் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளனர்.

அரசுக்கு 53 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர், உயர் நீதிமன்ற விசாரணை நீதிமன்றத்தால் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதே நேரத்தில் அரசுக்கு 53 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட உயர் நீதிமன்ற விசாரணையில் மகிந்தானந்த அளுத்கமகேவிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது சதோசா மூலம் கரம் போர்டுகளையும் செக்கர்ஸ் (டாம்) போர்டுகளையும் இறக்குமதி செய்து கழகங்களுக்கு விநியோகித்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மேல்முறையீட்டு ஆவணங்களைத் தயாரிப்பதற்காக தீர்ப்பின் சான்றளிக்கப்பட்ட நகலுக்காகக் காத்திருப்பதாக அவர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...