6 25
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் கற்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நபர்

Share

மொனராகல, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலுத்வெவ பகுதியில் இருவர் மீது கற்களால் தாக்குதல் மேற்கொண்டமையினால் ஒருவர் உயிரழிந்துள்ளார்.

காயமடைந்த இருவரில் ஒருவர் ஹம்பேகமுவ பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக ஹம்பேகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பலாங்கொடையை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமரதுங்க ஆராச்சிகே ராஜபக்ஷ மற்றும் அதே பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஹேவாவலிமுனிகே குணதாச ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

முச்சக்கர வண்டி சாரதியான சமரதுங்க ஆராச்சிகே ராஜபக்ஷ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், ஒரு கும்பல் கற்கள் மற்றும் ஆயுதங்களால் இருவரையும் முகம் மற்றும் தலையில் தாக்கியதாக தெரியவந்துள்ளது.

இந்தக் கொலையை செய்தவர்களைக் கைது செய்ய பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...