15 18
இலங்கைசெய்திகள்

அநுராதபுரத்தில் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட 2 சிறுமிகள் : காதலனும், காதலனின் நண்பனும் கைது

Share

அநுராதபுரத்தில் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட 2 சிறுமிகள் : காதலனும், காதலனின் நண்பனும் கைது

அநுராதபுரம், மிகிந்தலை பேருந்து தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த இரு சிறுமிகளை ஏமாற்றி வீடொன்றுக்கு அழைத்துச் சென்று தகாத முறைக்கு உட்படுத்தினர் எனக்கூறப்படும் காதலனும் காதலனின் நண்பனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஹடகஸ்திகிலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி கற்கும் இரு சிறுமிகளே தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

27 மற்றும் 30 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மிகிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, இந்த இரு சிறுமிகளும் பாடசாலைக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் பாடசாலைக்குச் செல்லாமல் உடைகளை மாற்றி வேறு பிரதேசத்துக்குச் சென்று மீண்டும் வீடு திரும்புவதற்காக மிகிந்தலை பேருந்து தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது, இந்தச் சிறுமிகளில் ஒருவரது காதலனான சந்தேகநபர் வானொன்றில் பேருந்து தரிப்பிடத்துக்குச் சென்று இரு சிறுமிகளையும் ஏமாற்றி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது, அந்த வீட்டிலிருந்தவர்கள் சிறுமிகளை வீட்டில் தங்க வைக்க அனுமதி வழங்க மறுத்துள்ளனர். பின்னர், சந்தேகநபரான காதலன் இந்தச் சிறுமிகளை ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று அவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், அந்தக் ஹோட்டலுக்குச் சென்ற காதலனின் நண்பன் சந்தேகநபரான காதலனுடன் இணைந்து இந்த இரு சிறுமிகளையும் தகாத முறைக்கு உட்படுத்தினர் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிகிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...