15 2
இலங்கைசெய்திகள்

தந்தையால் பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்ட 2 மகள்கள்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Share

பதுளை – ஊவா பரணகம, பகுதியில் வசிக்கும் 54 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் தனது இரண்டு மகள்களையும் பல ஆண்டுகளாக பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டின் பேரில் அம்பகஸ்தோவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாதிப்புக்குளான இருவரும் தற்போது 23 மற்றும் 29 வயதுடைய அவரது சொந்த மகள்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

தந்தை முன்னெடுத்த அத்துமீறல் செயற்பாடு தொடர்பில், இரண்டு மகள்களும் அம்பகஸ்டோவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடளித்துள்ளனர்.

இந்நிலையில் விசாரணைகள் தொடங்கப்பட்டு சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் குற்றங்களை தனது மனைவி அல்லது குடும்பத்தினரிடம் தெரிவித்தால், சந்தேக நபர் தன்னைச் சுட்டுக் கொன்றுவிடுவதாக மிரட்டி இந்தக் குற்றத்தைச் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர், சமூகத்தில் ஒரு நல்லொழுக்கமுள்ள நபராகவும் சமூக சேவகராகவும் காட்டிக் கொண்டு, வீட்டில் இந்தக் குற்றங்களைச் செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட இரண்டு இளம் பெண்களும் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் அம்பகஸ்டோவா காவல்துறையினர் சம்பவம் குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
16 2
இலங்கைசெய்திகள்

திடீரென்று பதவி விலகிய பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) தனது பதவியை விட்டு விலகியுள்ளார். பிரேன்கொய்ஸ் பெய்ரூவின்...

17 2
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியவர் விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்...

18 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக...

19 1
இலங்கைசெய்திகள்

மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற மூன்று பெண்கள் கோர விபத்தில் பலி

கம்பளை, டோலுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் காயமடைந்துள்ளார். சாலையைக்...