11 23
இலங்கைசெய்திகள்

யாழில் அரச பேருந்து ஊழியர்களைத் தாக்கிய நபர் கைது

Share

யாழில் அரச பேருந்து ஊழியர்களைத் தாக்கிய நபர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna) பேருந்து நிலையத்திற்குள் புகுந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காரைநகர் சாலை பேருந்தின் சாரதி மற்றும் யாழ். சாலை நடத்துநர் மீது தாக்குதலை நடத்தி தப்பியோடிய இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்குள் நேற்றுமுன்தினம் (24.12.2024) மாலை நுழைந்த இருவர் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றையதினம் (25.12.2024), அரச போக்குவரத்து துறையில் கடமையில் ஈடுபடும் யாழ் – காரைநகர் ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனுடனும் (R.Chandrasekar) இது குறித்து கலந்துரையாடலை முன்னெடுத்தனர்.

இவ்வாறான பின்னணியில் இந்த சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கைகளை எடுக்குமாறு, கடற்றொழில் அமைச்சர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர் வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் குறித்த வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு 1 மணிக்கு பின்னர் கைவிடப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் தாக்குதல் நடத்திய ஒருவர் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றையவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...