tamilni 364 scaled
இலங்கைசெய்திகள்

வடக்கில் கனமழையால் 19 ஆயிரம் பேர் பாதிப்பு

Share

வடக்கில் கனமழையால் 19 ஆயிரம் பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 6 ஆயிரத்து 213 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 370 பேர் பாதிப்படைந்துள்ளனர் என மாவட்ட அரச அதிபர்கள் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு அறிக்கையிட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் தொடர் மழை காரணமாக வடக்கின் 5 மாவட்டங்களும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

இதில் உச்சபட்சமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 715 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 572 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 372 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 904 பேர் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதுடன் மன்னார் மாவட்டத்தில் 628 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 271 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 279 குடும்பங்களைச் சேர்ந்த 878 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 219 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

இதற்கமைய வடக்கு மாகாணத்தில் இதுவரை 6 ஆயிரத்து 213 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 370 பேர் பாதிப்படைந்துள்ளனர் என வடக்கின் 5 மாவட்டங்களின் அரச அதிபர்களும் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...