tamilni 364 scaled
இலங்கைசெய்திகள்

வடக்கில் கனமழையால் 19 ஆயிரம் பேர் பாதிப்பு

Share

வடக்கில் கனமழையால் 19 ஆயிரம் பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 6 ஆயிரத்து 213 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 370 பேர் பாதிப்படைந்துள்ளனர் என மாவட்ட அரச அதிபர்கள் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு அறிக்கையிட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் தொடர் மழை காரணமாக வடக்கின் 5 மாவட்டங்களும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

இதில் உச்சபட்சமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 715 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 572 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 372 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 904 பேர் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதுடன் மன்னார் மாவட்டத்தில் 628 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 271 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 279 குடும்பங்களைச் சேர்ந்த 878 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 219 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

இதற்கமைய வடக்கு மாகாணத்தில் இதுவரை 6 ஆயிரத்து 213 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 370 பேர் பாதிப்படைந்துள்ளனர் என வடக்கின் 5 மாவட்டங்களின் அரச அதிபர்களும் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...