9 27
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 19 பேரை கொலை செய்ய திட்டம் : வெளியான அதிர்ச்சி தகவல்

Share

இலங்கையில் 19 பேரை கொலை செய்ய திட்டம் : வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் அடுத்த வரும் சில நாட்களில் 19 கொலைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினரை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த சதி நடவடிக்கை இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள பாதாள உலகக் கும்பல்களால் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரிடம் இரகசிய அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, பாதாள உலகக் குழுக்களிடையே நடத்தப்படும் இந்த கொலை அலைகளை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, மேற்கு தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு அண்மையில் அறிவித்துள்ளார்.

இவ்வாறு இனங்காணப்பட்ட பாதாள உலக கொலைக் கும்பல்கள் தமக்கு இலக்கானவர்கள் மற்றும் தாங்கள் கட்டுப்படுத்தும் வெளிநாட்டு பாதாள உலகக் குழுக்கள் தொடர்பான இரகசிய புலனாய்வு அறிக்கையை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தப் படுகொலை இலக்குகள் தொடர்பிலும் பாதாள உலகக் குழு தொடர்பிலும் ஊடகங்களுக்கு தகவல் வழங்கிய அமைப்பின் தலைவர் ஒருவரை பழிவாங்கும் வகையில் அவரது சகோதரரைக் கொலை செய்ய முயற்சித்தமையும் தெரியவந்துள்ளது.

கஞ்சிபானி இம்ரான், குடுலால், அஹுங்கல்லே லொகு பெட்டி, அஹுங்கல்லே பொடி பெட்டி, கொஸ்கொட சுஜீ, கரந்தெனிய சுத்தா, மட்டக்குளியே ரொஷான், ரத்கம விதுர, பிரான்ஸின் ஆனந்த, படோவிட்ட அசங்க, கணேமுல்ல சஞ்சீவ உள்ளிட்ட பாதாள உலகக் குழுக்களின் போதைப்பொருள் மற்றும் அதிகாரம் தொடர்பான கருத்து மோதல்கள் காரணமாகவே இந்த கொலைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
image d995b5e86f
செய்திகள்இலங்கை

அரிசி பதுக்கல்: 5,000 பொதிகள் பறிமுதல்; 6.3 மில்லியன் ரூபா வருமானம்!

சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அரிசியைப் பதுக்கி வைத்திருந்த வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை...

images 9 1
செய்திகள்இலங்கை

கொழும்பு பங்குச் சந்தையில் பாரிய குழப்பம்: இன்றைய அனைத்து வர்த்தகங்களும் இரத்து!

கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) இன்றைய வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பமான சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட தொழில்நுட்ப...

26 695b25e4753e8
செய்திகள்உலகம்

டொரோண்டோவில் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை: பாடசாலை பேருந்து சேவைகள் ரத்து; போக்குவரத்து முடக்கம்!

கனடாவின் டொரோண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல மணிநேரம் நீடித்த உறைபனி மழையைத் (Freezing...

MediaFile 5 2
செய்திகள்இலங்கை

பொருளாதார மீட்சியில் முக்கிய மைல்கல்: ஜேர்மனியுடன் 188 மில்லியன் யூரோ கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் ஒரு அங்கமாக, ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையில்...