9 27
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 19 பேரை கொலை செய்ய திட்டம் : வெளியான அதிர்ச்சி தகவல்

Share

இலங்கையில் 19 பேரை கொலை செய்ய திட்டம் : வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் அடுத்த வரும் சில நாட்களில் 19 கொலைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினரை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த சதி நடவடிக்கை இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள பாதாள உலகக் கும்பல்களால் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரிடம் இரகசிய அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, பாதாள உலகக் குழுக்களிடையே நடத்தப்படும் இந்த கொலை அலைகளை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, மேற்கு தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு அண்மையில் அறிவித்துள்ளார்.

இவ்வாறு இனங்காணப்பட்ட பாதாள உலக கொலைக் கும்பல்கள் தமக்கு இலக்கானவர்கள் மற்றும் தாங்கள் கட்டுப்படுத்தும் வெளிநாட்டு பாதாள உலகக் குழுக்கள் தொடர்பான இரகசிய புலனாய்வு அறிக்கையை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தப் படுகொலை இலக்குகள் தொடர்பிலும் பாதாள உலகக் குழு தொடர்பிலும் ஊடகங்களுக்கு தகவல் வழங்கிய அமைப்பின் தலைவர் ஒருவரை பழிவாங்கும் வகையில் அவரது சகோதரரைக் கொலை செய்ய முயற்சித்தமையும் தெரியவந்துள்ளது.

கஞ்சிபானி இம்ரான், குடுலால், அஹுங்கல்லே லொகு பெட்டி, அஹுங்கல்லே பொடி பெட்டி, கொஸ்கொட சுஜீ, கரந்தெனிய சுத்தா, மட்டக்குளியே ரொஷான், ரத்கம விதுர, பிரான்ஸின் ஆனந்த, படோவிட்ட அசங்க, கணேமுல்ல சஞ்சீவ உள்ளிட்ட பாதாள உலகக் குழுக்களின் போதைப்பொருள் மற்றும் அதிகாரம் தொடர்பான கருத்து மோதல்கள் காரணமாகவே இந்த கொலைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...