அளுத்கமைப் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர் கொழும்பு வடக்குக் குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் திருடிய 8 இலட்சம் ரூபாய் பணத்தை சூதாட்டத்திற்கும் தனது காதலிக்கும் செலவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சந்தேகநபரிடமிருந்து 1.5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பணம், அத்துடன் காதலிக்கு பரிசளிக்கப்பட்ட 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் கைத்தொலைபேசி மற்றும் 61 மாணிக்கக் கற்கள் ஆகியவற்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

