tamilnaadi 22 scaled
இலங்கைசெய்திகள்

கைவிடப்பட்டுள்ள அதிசொகுசு பேருந்துகள் தொடர்பில் தீர்மானம்

Share

கைவிடப்பட்டுள்ள அதிசொகுசு பேருந்துகள் தொடர்பில் தீர்மானம்

இலங்கை போக்குவரத்து சபையினால் கைவிடப்பட்டுள்ள அதிசொகுசு பேருந்துகளை புனரமைத்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான ஒருதொகை அதிசொகுசு பேருந்துகள் ஒரு காலத்தில் சுற்றுலாத்துறையின் பயணங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தன.

அதன் பின்னர் சிறு திருத்தங்கள் காரணமாக குறித்த பேருந்துகள் சுற்றுலாத்துறையில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதுடன் போக்குவரத்துச் சபையும் குறித்த பேருந்துகளை பயன்பாட்டில் இருந்து ஒதுக்கி வைத்திருந்தது.

இந்நிலையில் அவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 அதிசொகுசுப் பேருந்துகளை புனரமைத்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரத்மலானை வளாகத்தில் புனரமைக்கப்பட்ட இப்பேருந்துகளின் திருத்தப்பணிகளுக்கு பத்து மில்லியன் ரூபாவிற்கும் குறைவான தொகையே செலவிடப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளில் இந்தப் பேருந்துகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ள நிலையில் ஒரு பேருந்தின் மூலம் நாளொன்றுக்கு ஒரு லட்சம் ரூபா வரை வருமானம் ஈட்ட முடியும் என்றும் போக்குவரத்து அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
06 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஒரே நாளில் 549 பேர் கைது: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் போக்குவரத்து விதிமீறல்களும் அடக்கம்!

இலங்கை பொலிஸாரினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது,...

05 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ‘பொடி லெசி’: விசாரணைகளுக்காக காலி குற்றத்தடுப்புப் பிரிவில் ஒப்படைப்பு!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று (பிப்ரவரி 27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாரிய அளவிலான...

04 3
செய்திகள்விளையாட்டு

அபிஷேக் சர்மா வெறும் ‘ஸ்லோகர்’ அல்ல, யுவராஜ் சிங் போன்ற திறமையாளர்: முகமது அமீருக்கு அஸ்வின் பதிலடி!

இந்திய அணியின் இளம் அதிரடித் துடுப்பாட்ட வீரர் அபிஷேக் சர்மா தொடர்பாகப் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து...

03 2
இந்தியாசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு: சுரேஷ் சலே மீதான 5 முக்கிய குற்றச்சாட்டுகள் வெளியீடு – PTA-வின் கீழ் விசாரணை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கடந்த 25 ஆம் திகதி கைது செய்யப்பட்ட புலனாய்வுப் பிரிவின்...