12 27
இலங்கைசெய்திகள்

புஸல்லாவையில் அமையப்போகும் 16 அடி உயரமான கற்பக விநாயகர் சிலை

Share

புஸல்லாவையில் அமையப்போகும் 16 அடி உயரமான கற்பக விநாயகர் சிலை

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 16 அடி உயரம் கொண்ட இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள பிள்ளையார்பட்டி கற்பக வியாகர் சிலையை ஒத்த குகை சிலை புஸ்ஸல்லாவயில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

குறித்த பிரதிஷ்டை நிகழ்விற்கான பூமி பூஜை எதிர்வரும் செப்டெம்பர் 08 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன் முதல் கட்டமாக அன்றைய தினம் (08) புதிதாக அமைக்கப்பட்ட வழி பிள்ளையருக்கான சன்னதி கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் 07 ஆம் திகதி பிள்ளையார் சதுர்த்தி தினத்தன்று எண்ணெய் காப்பும் செப்டெம்பர் 06ஆம் திகதி ஆரம்ப நிகழ்வு பூஜைகளும் விநாயகர் பிரதிஷ்டையும் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வுகளில் பக்தர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைப்பதோடு மேற்படி பதினாறு அடி கொண்ட கற்பக விநாயகர் சிலை இந்தியா – தமிழ்நாடு பிள்ளையார்பட்டி ஆலய வளாகத்தில் செதுக்கப்பட்டு வருகின்றது.

இந்த சிலை இங்கு பிரதிஷ்டை செய்யப்படும் சந்தர்ப்பத்தில் இலங்கையில் காணப்படும் மிக உயரமான கற்பக விநாயகர் சிலை இதுவாகவே அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சிலையானது கண்டி – நுவரெலியா பிரதான பாதையில் புஸ்ஸல்லாவ நகரத்தை குறிக்கும் ஆரம்பப் பகுதியிலேயே பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் இந்த சிலை, உல்லாச பயணிகளை மிகவும் கவர்ந்ததாக அமையும் என்பதுடன் இந்த தெய்வீக உன்னத பணியில் இலங்கையில் வாழும் பக்த அடியார்கள் அனைவரும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...