24 66303a9421c39
இலங்கைசெய்திகள்

மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையின் 1500 பேருந்துகள்

Share

மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையின் 1500 பேருந்துகள்

நாளை (1ஆம் திகதி) மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையிடம் 1500 பேருந்துகளை அரசியல் கட்சிகள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று (29 ஆம் திகதி) மாலை வரை இருநூறு பேருந்துகளுக்கு மாத்திரமே பணம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பெரும்பாலும் பேருந்துகளை கோரியுள்ளன.

இலங்கை போக்குவரத்துச் சபையின் 107 டிப்போக்களின் கீழ் நான்காயிரத்து எழுநூறு பேருந்துகள் இயங்கி வருகின்றன.இதில் ஆயிரத்து ஐநூறு பேருந்துகளுக்கான கோரிக்கை கிடைத்துள்ளது.

இந்த பேருந்துகளை வழங்கும்போது, ​​அரசு சுற்றறிக்கையின்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பேருந்துகளுக்கு செலுத்த வேண்டிய மொத்த தொகையை கட்டாயம் செலுத்த வேண்டும். முழுத் தொகையும் செலுத்தாமல் ஒரு பேருந்து கூட தரப்படாது என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: பண்டிகை முற்பணம் ரூ. 15,000 ஆக உயர்வு! இடர் கடன் முற்பணம் ரூ. 4 இலட்சமாக அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் (Festival Advance) மற்றும் இடர் கடன் முற்பணம் (Distress...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...