6 10
இலங்கைசெய்திகள்

இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்தும் 1.5 கோடிக்கும் அதிகமான சிறுவர்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

Share

உலகம் முழுவதும் 1.5 கோடிக்கும் அதிகமான சிறுவர்கள் இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்துகின்றனர் எனவும் இது ஒரு புதிய நிக்கோடின் அடிமைத்தனத்தைத் தூண்டி வருவதாக உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிடைக்கப்பெற்ற உலகளாவிய புள்ளிவிவரங்களின்படி, சிறுவர்கள் பெரியவர்களை விட சராசரியாக ஒன்பது மடங்கு அதிகமாக ‘வேப்பிங்’ (Vaping) எனப்படும் இ-சிகரெட் பழக்கத்திற்கு ஆளாகின்றனர்.

புகையிலைத் துறை ” இளம் வயதினரை இலக்கு” வைத்து இ-சிகரெட்டுகளை சந்தைப்படுத்துகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது ‘தீங்குகளைக் குறைக்கும்’ (harm reduction) பொருளாகக் கூறப்பட்டாலும், உண்மையில் இது சிறு வயதிலேயே சிறுவர்களை நிக்கோடினுக்கு அடிமையாக்குகிறது என்று வைத்தியர் எட்டியன் க்ரூக் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இ-சிகரெட் பயன்படுத்தும் பெரியவர்களின் எண்ணிக்கை 8.6 கோடி ஆகும். 13 முதல் 15 வயதுக்குட்பட்ட 1.5 கோடிக்கும் அதிகமான இளம் பருவத்தினர் ‘வேப்பிங்’ பயன்படுத்துகின்றனர்.

உலகளவில் புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2000ஆம் ஆண்டில் 138 கோடியாக இருந்தது, இது 2024இல் 120 கோடியாகக் குறைந்துள்ளது. பெண்களிடையே இதன் பயன்பாடு 2010இல் 11%இல் இருந்து 2024இல் 6.6%ஆகக் குறைந்துள்ளது.

ஆண்களிடையே 2010இல் 41.4%இல் இருந்து 32.5% ஆகக் குறைந்துள்ளது.

இருப்பினும், உலகளவில் ஐந்தில் ஒரு வயது வந்தவர் இன்னும் புகையிலையைப் பயன்படுத்துகிறார்.

இ-சிகரெட்டுகளைக் கட்டுப்படுத்த நாடுகள் முயற்சித்தாலும், 2024ஆம் ஆண்டின் இறுதி வரையில், 62 நாடுகளில் இ-சிகரெட் கொள்கைகள் இல்லை, மேலும் 74 நாடுகளில் இ-சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு எதுவும் நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...