rtjy 17 scaled
இலங்கைசெய்திகள்

நடைமுறையில் உள்ள 13! ஆனால் பொலிஸ் அதிகாரம் கிடையாது

Share

நடைமுறையில் உள்ள 13! ஆனால் பொலிஸ் அதிகாரம் கிடையாது

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தில் இருக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணசபைகளுக்கு வழங்கவேண்டும் என்ற என்பதே ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசிலமைப்பின் 13ஆம் திருத்தம் தற்போதும் நடைமுறையில் இருக்கிறது. அதனால்தான் மாகாண முதலமைச்சராக என்னால் செயற்பட முடியுமாகி இருந்தது.

மேல் மாகாணத்தில் எங்களால் முடிந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டிருந்தோம். அத்துடன் நிர்வாக அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் எப்போதும் இருந்து வருகிறேன்.

ஏனெனில் கொழும்பில் இருந்து கல்வி அமைச்சு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது.

அதனால் நிர்வாக அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதன் மூலம் இவ்வாறான பிரச்சினைகளுக்கு அந்த மாகாணங்களுக்குள்ளே தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியுமாகிறது.

அத்துடன் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தில் இருக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணசபைகளுக்கு வழங்கவேண்டும் என்ற என்பதே ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

அதில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ளவதாக இருந்தால் அது தொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க முடியும் என குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
22731289 police
செய்திகள்உலகம்

தென்னாப்பிரிக்காவில் பயங்கரம்: மதுபான விடுதிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு – 9 பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகருக்கு அருகிலுள்ள பெக்கெர்ஸ்டால் (Bekkersdal) பகுதியில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்...

IMG 20220401 WA0047
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணக் கொடுப்பனவில் பாரபட்சம்: புத்தளம் – கொழும்பு வீதியை மறித்து முந்தல் மக்கள் போராட்டம்!

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்ய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவுக்கான பெயர்ப்பட்டியல்...

image 3d037a514a
செய்திகள்இலங்கை

கட்டுநாயக்கவில் 63 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: வர்த்தகர் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளைச் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்த அவிசாவளைப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர்...

Shantha Pathmakumara 2024.10.27 1
செய்திகள்அரசியல்இலங்கை

NPP பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார மீது தாக்குதல் குற்றச்சாட்டு: பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதி!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார மற்றும் அவரது...