தென்னிலங்கையில் வீண் முரண்பாடுகள்!! சர்ச்சையை கிளப்பும் தேரர்
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் வீண் முரண்பாடுகள்!! சர்ச்சையை கிளப்பும் தேரர்

Share

தென்னிலங்கையில் வீண் முரண்பாடுகள்!! சர்ச்சையை கிளப்பும் தேரர்

13ஆவது திருத்த சட்டம் தொடர்பில் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மக்கள் பேரவையின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதை தொடர்ந்து இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

ஆகவே, அவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கிய மக்களாணைக்கு அமைய செயற்பட வேண்டும்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவதாக சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.

தேசிய பொருளாதாரம், சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவற்றை பாதுகாப்பாதற்காகவே ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்தோம் என பொதுஜன பெரமுனவினர் குறிப்பிடுகிறார்கள்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் தென்னிலங்கையில் வீண் முரண்பாடுகள் தோற்றம் பெறும். நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆகவே பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இல்லாத பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை எவ்வாறு ஜனாதிபதி நடைமுறைப்படுத்துவார் என்பதை நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஜனாதிபதிக்கும், நாடாளுமன்றத்துக்கும் மக்கள் ஆணை கிடையாது.

ஆகவே, 13ஆவது திருத்தம் தொடர்பில் நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டுமென்றால் அதற்கு மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது அத்தியாவசியமானது.

மக்கள் வாக்கெடுப்பு ஒன்று நடத்தினால் முரண்பாடற்ற நிலையான தீர்வினை பெற்றுக்கொள்ளலாம்.

அதனை விடுத்து மக்கள் ஆணை இல்லாத தரப்பினர் எடுக்கும் தீர்மானம் நாட்டில் முரண்பாடுகளை மாத்திரமே தோற்றுவிக்கும்.

13ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை அவதானித்துக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
b08a9d50370cb3acf536546f5c0646b0 1
செய்திகள்இலங்கை

இந்தியா-இலங்கை இடையே புதிய கப்பல் பாதை: ராமேஸ்வரம் – தலைமன்னார் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே, ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயான புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது குறித்து...

25 69005c8fb83eb
செய்திகள்இந்தியா

விசேட சோதனை: 2025ல் இதுவரை 2,097 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன – பொலிஸார் தகவல்

இந்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி...

25 69002cc98d286
செய்திகள்இலங்கை

கொழும்பு நிலப் பதிவேடு: அதிகாரப்பூர்வ கோப்பில் இருந்த கடிதம் மாயம் – விசாரணைக்கு நீதிவான் உத்தரவு

கொழும்பு நிலப் பதிவேட்டின் அதிகாரப்பூர்வ கோப்பில் இருந்த ஒரு கடிதம் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம்...

25 68fc59844d405
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தி வழக்கில் வடக்கு மாகாணத்தில் தீவிர விசாரணை: முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கைது

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகவும், வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லவும் உதவிய நபர்கள்...