tamilni 175 scaled
இலங்கைசெய்திகள்

13 அஞ்சல் நிலையங்கள் தொடர்பில் அறிவிப்பு

Share

13 அஞ்சல் நிலையங்கள் தொடர்பில் அறிவிப்பு

கொழும்பு மற்றும் களுத்துறையை உள்ளடக்கிய மேல் மாகாண தெற்கில் உள்ள 13 அஞ்சல் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பான அபராதங்களை ஏற்றுக்கொள்வதற்காக இந்த அஞ்சல் நிலையங்கள் இரவிலும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட இதனை அறிவித்துள்ளார்.

இதன்படி கொம்பனி வீதி, ஹெவ்லொக் டவுன், வெள்ளவத்தை, பொரளை, கொட்டாஞ்சேனை, பத்தரமுல்ல, நுகேகொட, தெஹிவளை, கல்கிசை, மொரட்டுவ, பாணந்துறை, களுத்துறை மற்றும் சீதாவகபுர போன்ற குறிப்பிட்ட அஞ்சல் நிலையங்கள், 7 நாட்களும் 24 மணித்தியாலங்களும் திறந்திருக்கும்.

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக வாகன செலுத்துனர்களை சோதனையிடும் போதும்,இந்த அஞ்சல் நிலைய சேவைகள் தொடர்பில் போக்குவரத்து பொலிஸார் அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...