tamilni 175 scaled
இலங்கைசெய்திகள்

13 அஞ்சல் நிலையங்கள் தொடர்பில் அறிவிப்பு

Share

13 அஞ்சல் நிலையங்கள் தொடர்பில் அறிவிப்பு

கொழும்பு மற்றும் களுத்துறையை உள்ளடக்கிய மேல் மாகாண தெற்கில் உள்ள 13 அஞ்சல் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பான அபராதங்களை ஏற்றுக்கொள்வதற்காக இந்த அஞ்சல் நிலையங்கள் இரவிலும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட இதனை அறிவித்துள்ளார்.

இதன்படி கொம்பனி வீதி, ஹெவ்லொக் டவுன், வெள்ளவத்தை, பொரளை, கொட்டாஞ்சேனை, பத்தரமுல்ல, நுகேகொட, தெஹிவளை, கல்கிசை, மொரட்டுவ, பாணந்துறை, களுத்துறை மற்றும் சீதாவகபுர போன்ற குறிப்பிட்ட அஞ்சல் நிலையங்கள், 7 நாட்களும் 24 மணித்தியாலங்களும் திறந்திருக்கும்.

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக வாகன செலுத்துனர்களை சோதனையிடும் போதும்,இந்த அஞ்சல் நிலைய சேவைகள் தொடர்பில் போக்குவரத்து பொலிஸார் அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...