tamilni 12 scaled
இலங்கைசெய்திகள்

வீதி விபத்துகளில் பறிபோகும் சிறுவர்களின் உயிர்!

Share

வீதி விபத்துகளில் பறிபோகும் சிறுவர்களின் உயிர்!

இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையில் வீதி விபத்துக்களினால் 115 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக வீதி விபத்துக்களை தடுப்பதற்கான நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் சமத் தர்மரத்ன தெரிவித்துள்ளார்.

”பாதுகாப்பான சாலைகள்-பாதுகாப்பான குழந்தைகள்” என்ற சர்வதேச சாலை பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான பணியாளர்களை உருவாக்கும் 15 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களே பெரும்பாலும் இந்த விபத்துக்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 3,000 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழக்கின்றனர், மேலும் இது தொடர்பான போக்கு அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், எதிர்காலத்தில் வீதி விபத்துக்களால், உயிரிழப்புகள் மற்றும் ஊனமுற்றவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும், இதனால் நாட்டிற்கு கணிசமான பொருளாதார இழப்புக்கள் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....