இலங்கைசெய்திகள்

108 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்துமூலம் சென்ற முக்கிய அறிவிப்பு

24 6700b6e9947bf
Share

108 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்துமூலம் சென்ற முக்கிய அறிவிப்பு

மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பில் தங்கியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசரமாக புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்ட உள்ளமையினால் நாடாளுமன்ற உறுப்பினர்களை குடியிருப்புகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவிற்கமைய, தற்போது ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிலிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.

மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் உத்தியோகபூர்வ வீட்டுத்தொகுதியில் சுமார் 120 வீடுகள் உள்ளதுடன், எஞ்சிய வீடுகளில் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதிவெல குடியிருப்பு வளாகத்தில் குடியிருப்புகள் வழங்கப்பட உள்ளதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...