14 18
இலங்கைசெய்திகள்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான 108 வாகனங்கள் மாயம்

Share

சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான 108 வாகனங்கள் மாயம்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான 108 வாகனங்கள் அந்த திணைக்களத்தில் இல்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்துத்துறையில் பதிவு செய்யப்பட்ட 128 வாகனங்களில் 108 வாகனங்கள் கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

மேலும், பாதுகாப்புத்துறையின் போக்குவரத்து மற்றும் கணக்குப் பிரிவு ஆகிய இரு பிரிவுகளிலும் இருந்த 444 வாகனங்களில் 82 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பதிவு செய்யப்படாத வாகனங்களின் மதிப்பு பதினான்கு கோடியே ஒரு இலட்சத்து முப்பத்தைந்தாயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சிவில் பாதுகாப்புத்திணைக்களம் தொடர்பாக 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் இந்த தகவல் சேர்க்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...