24 66590d9667f2d
இலங்கைசெய்திகள்

தனியார் பல்கலைக்கழங்களில் பட்டப்படிப்பு: மாணவர்களுக்கு அதிஷ்டம்

Share

தனியார் பல்கலைக்கழங்களில் பட்டப்படிப்பு: மாணவர்களுக்கு அதிஷ்டம்

தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்கான வரம்பு 10 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இம்முறை கடனைப் பெறுவதற்கான பிணை நிபந்தனைகளும் அதிகரிக்கப்பட உள்ளன.

தற்போது தனியார் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்துள்ள மாணவர்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பணியை உயர்கல்வி அமைச்சு நிறைவு செய்துள்ளது.அந்தத் தகவலின் அடிப்படையில் இம்முறை கடன் வழங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

இவ்வருடம் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் இன்னும் கூடுதலான மாணவர்களுக்கு கடனுதவி வழங்க முடியும் எனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் கடன் திட்டத்தில் இதுவரை ஏழு குழுக்களின் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அதிகபட்ச கடன் வரம்பு எட்டு இலட்சம் ரூபாய். நான்கு ஆண்டு பட்டப்படிப்புக்கு எட்டு இலட்சம் ரூபாயும், மூன்றாண்டு படிப்புக்கு ஆறு இலட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த கடன் திட்டத்தில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் மூவாயிரத்து ஐநூறு ஆகும் .

Share
தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...