இலங்கைசெய்திகள்

தனியார் பல்கலைக்கழங்களில் பட்டப்படிப்பு: மாணவர்களுக்கு அதிஷ்டம்

Share
24 66590d9667f2d
Share

தனியார் பல்கலைக்கழங்களில் பட்டப்படிப்பு: மாணவர்களுக்கு அதிஷ்டம்

தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்கான வரம்பு 10 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இம்முறை கடனைப் பெறுவதற்கான பிணை நிபந்தனைகளும் அதிகரிக்கப்பட உள்ளன.

தற்போது தனியார் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்துள்ள மாணவர்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பணியை உயர்கல்வி அமைச்சு நிறைவு செய்துள்ளது.அந்தத் தகவலின் அடிப்படையில் இம்முறை கடன் வழங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

இவ்வருடம் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் இன்னும் கூடுதலான மாணவர்களுக்கு கடனுதவி வழங்க முடியும் எனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் கடன் திட்டத்தில் இதுவரை ஏழு குழுக்களின் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அதிகபட்ச கடன் வரம்பு எட்டு இலட்சம் ரூபாய். நான்கு ஆண்டு பட்டப்படிப்புக்கு எட்டு இலட்சம் ரூபாயும், மூன்றாண்டு படிப்புக்கு ஆறு இலட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த கடன் திட்டத்தில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் மூவாயிரத்து ஐநூறு ஆகும் .

Share
Related Articles
16 4
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் டெக்சாஸின் (Texas ) எல் பாசோ நகருக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

20 5
உலகம்செய்திகள்

இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையத்தில் விழுந்து வெடித்த ஏமனின் ஏவுகணை

ஏமனின் ஹவுதிப்படையினாரால் (Houthi ) ஏவப்பட்ட ஏவுகணை, இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தில்...

17 4
இலங்கைசெய்திகள்

யாழில் முதலில் அவருக்கு கால் வைக்க முடியுமா! கடற்றொழில் அமைச்சர் பகிரங்கம்

அநுரவை யாழ்ப்பாணத்தில் கால் வைக்க விடமாட்டோம் எனக் கூறுகின்ற நபர் முதலில் தனக்கு கால் வைக்க...

18 4
உலகம்செய்திகள்

பாப்பரசர் என்று சித்தரிக்கும் AI படத்தால் ட்ரம்ப் மீது கடும் விமர்சனம்

தன்னை பாப்பரசர் என்று சித்தரிக்கும் AI யால் உருவாக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்ததற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...