tamilni 418 scaled
இலங்கைசெய்திகள்

முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கும் எண்ணிக்கையில் மாற்றம்

Share

முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கும் எண்ணிக்கையில் மாற்றம்

பிறப்பு எண்ணிக்கை குறைந்ததால் பாடசாலைகளில் முதலாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சமாக குறைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டில், 345,000 மாணவர்கள் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கப்பட்டனர். எனினும் 2018 இல் அந்த எண்ணிக்கை 328,000 ஆகக் குறைந்துள்ளது.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டளவில் முதலாம் தரத்திற்கு சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சமாக குறைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும், 2012ஆம் ஆண்டு ஐந்தாம் தரத்தில் 327,849 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 2018ஆம் ஆண்டில் அது 347,500 ஆக அதிகரித்தது. எனினும் 2022ஆம் ஆண்டில் 328,000 மாணவர்கள் ஐந்தாம் தரத்திற்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டு பாடசாலை காலத்தில் பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை 16.07 வீதமாக இருந்த போதிலும் தற்போது அது 7 வீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

6, 7, 8, 9 ஆகிய வகுப்புகளில் கற்கும் மாணவர்களே இவ்வாறு பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
New Project 185 1
செய்திகள்அரசியல்இலங்கை

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிராகப் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

ரில்வின் சில்வா கடந்த 21ஆம் திகதி லண்டனுக்குச் சென்றார். அவர் நேற்றுப் பிற்பகலில், லண்டன் –...

4OIQC0T image crop 26859
செய்திகள்இலங்கை

இளம் பெண்கள்: போதிய ஆதரவின்றி பாலியல் தொழிலுக்குத் திரும்புவதாக அறக்கட்டளை கவலை!

18 வயதில் நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள்,...

1763786264 landslide 6
செய்திகள்இலங்கை

கடுகண்ணாவ கோர விபத்து: அபாயகரமான பகுதியாக அறிவிப்பு – 6 பேர் பலி!

அண்மையில் கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து, அந்தப் பகுதி மிகவும் அபாயகரமானதென அடையாளம்...

AP23249341908962 1763956497
உலகம்செய்திகள்

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களுக்குத் தடை: சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கம்!

அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய மலேசியா தீர்மானித்துள்ளதாக...