13 4
இலங்கைசெய்திகள்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

Share

அரசுத் துறையில் 35,000 வேலையற்ற பட்டதாரிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக துணை அமைச்சர் எரங்க குணசேகர (Eranga Gunasekara )அறிவித்தார்.

இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 வரவு செலவுத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்படும் என்று அவர் கூறினார்.

இலங்கையில் வருடாந்தம் அரச பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் பட்டதாரிகள் அரச வேலைவாய்ப்பை நம்பியே இருக்கின்றனர்.இவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப அரசால் வேலை வாய்ப்பை வழங்க முடியாதுள்ளது என்பதே உண்மையாகும்.

அண்மையில் கூட யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவிடம் வேலை வாய்ப்பை வழங்க கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அரச துறையை மட்டும் நம்பியிருக்க வேண்டாம் என வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ (Anil Jayantha Fernando)அண்மையில் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...