25 677b28843471a
இலங்கைசெய்திகள்

ரணில் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் செய்த மிகப்பெரிய மோசடி! அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அநுர அரசு,

Share

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ(Harin Fernando) 320 மில்லியன் ரூபா தொகையை முறைகேடாக செலவு செய்தமை தொடர்பிலான விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என இளைஞர் விவகார பிரதியமைச்சர் எரங்க குணசேகர(Eranga Gunasekara) தெரிவித்துள்ளார்.

தணிக்கை அறிக்கையின் கண்டுபிடிப்புகள் குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், 320 மில்லியன் ரூபா தொகையானது, ஹரின் பெர்னாண்டோ அமைச்சராக இருந்த காலத்தில் எவ்வாறு முறைகேடாக செலவுசெய்யப்பட்டது என்ற தகவல்களை தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்பட்ட இசை நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு இந்த தொகை செலவு செய்யப்பட்டதாக முன்னதாக தெரியவந்தது.

அப்போதைய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் தொடர்பில் வெளியாகிய கணக்காய்வு அறிக்கையின்படி, செலவழிக்கப்பட்ட மொத்தத் தொகை 320,339,323 என கூறப்பட்டுள்ளது.

மஹரகம, காலி, அம்பாறை, குளியாப்பிட்டிய, புத்தளம், தம்புள்ளை, யாழ்ப்பாணம், மஹியங்கனை, ஹட்டன், ஹிங்குராங்கொட, பண்டாரவளை, வெலிசறை, கொழும்பு ரேஸ்கோர்ஸ், கேதாராம மைதானம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கான செலவு விவரங்கள் பின்வருமாறு கணக்கிடப்பட்டுள்ளது.

“மஹியங்கனை பொது விளையாட்டு மைதானம் (பதுளை மாவட்டம்): 64,986,789 ரூபாய்.

பண்டாரவளை நகரசபை மைதானம்: 20,179,185 ரூபாய்

மஹரகம இளைஞர் சேவைகள் மன்றம்: 16,667,851 ரூபாய்

சமணலா மைதானம் (காலி): 31,417,778 ரூபாய்

வீரசிங்க விளையாட்டரங்கம் (அம்பாறை): 9,491,477 ரூபாய்

குளியாபிட்டிய தொழில்நுட்பக் கல்லூரி மைதானம்: 68,105,908ரூபாய்

புத்தளம் கடற்கரை மைதானம்: 14,834,651 ரூபாய்

தம்புள்ளை: 15,289,150 ரூபாய்

முற்றவெளி மைதானம் (யாழ்ப்பாணம்): 39,037,339 ரூபாய்

ஹட்டன் டன்பார் மைதானம்: 234,592 ரூபாய்

ஹிங்குராக்கொட டட்லி சேனாநாயக்க மைதானம்: 14,830,835 ரூபாய்

கேத்தாராம மைதானம் (கொழும்பு): 13,685,800 ரூபாய்

கொழும்பு ரேஸ்கோர்ஸ்: 14,571,192 ரூபாய்

வெலிசர மைதானம்: 60,700 ரூபாய்” என கூறப்பட்டுள்ளது.

எனினும் இந்த செலவு விபரங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும் அரசாங்கத்தான் சில உயர்மட்ட தரப்புக்களின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இது தொடர்பான தணிக்கை அறிக்கை, அனைத்து ஆவணங்களுடன், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...