கம்பஹா – திஹாரிய பகுதியில் இன்று (08) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் நீண்டகாலமாகத் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் உரிமையைப் பெறாமல் உள்ளனர். எனவே, அரசாங்கம் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி அவர்களுக்குரிய அதிகாரத்தை வழங்க வேண்டும்.
நாட்டில் அடுத்து எந்தத் தேர்தல் நடத்தப்பட்டாலும், அதனை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முழுமையாகத் தயாராக உள்ளது.
தேர்தலை இலக்காகக் கொண்டு கிராமிய மட்டத்திலான அரசியல் குழுக்களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் தேர்தல்களில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து இதுவரை எவ்வித இறுதி முடிவுகளும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். தற்போது கட்சியைத் தனித்துவமாகப் பலப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல்கள் நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுஜன பெரமுனவின் இந்தத் திடீர் வலியுறுத்தல் அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.