8 9
இலங்கைசெய்திகள்

பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்து கொலை – தென்னிலங்கையில் கொடூரம்

Share

ராகம (Ragama) பகுதியில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலை சம்பவம் நேற்று (05) மாலை ராகம – தலகொல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண் தலகொல்ல, ராகம பகுதியைச் சேர்ந்த 76 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இறந்த பெண் தனது கணவருடன் வீட்டில் வசித்து வந்ததாகவும், சம்பவம் நடந்த நேரத்தில் கணவர் வேலைக்குச் சென்றிருந்ததாகவும் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கணவர் வீடு திரும்பி மனைவியைச் தேடிய போது, ​​அவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக ராகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
11 2
செய்திகள்அரசியல்இலங்கை

டிக்கோயா மருத்துவமனை சவச்சாலையில் உடலத்திற்கு அவமரியாதை: ஊழியர்களுக்கு எதிராகக் கொதித்தெழுந்த மக்கள்

ஹட்டன் – டிக்கோயா, கிளங்கன் ஆதார மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணின் உடலத்திற்குச் சவச்சாலையில் அவமரியாதை செய்யப்பட்டதாகக்...

10 2
செய்திகள்உலகம்

அமெரிக்க – பிரிட்டன் உறவில் விரிசல்: பிரதமர் கீர் ஸ்டார்மரை பகிரங்கமாகச் சாடிய டொனால்ட் டிரம்ப்

மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு வழங்க...

09 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய நடைமுறை: வங்கி கணக்கு முதல் வாகனப் பதிவு வரை ‘TIN’ சான்றிதழ் கட்டாயம்

உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் பொதுமக்கள் அன்றாடம் மேற்கொள்ளும் பல...

08 2
செய்திகள்இலங்கை

ஈரான் மீதான தாக்குதலுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடும் கண்டனம்: ரிஷாட் பதியுதீன் அறிக்கை

ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும்...