பிற்போடப்பட்டது வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நிகழ்வு.
வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறுஅறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் தனியான பல்கலைக்கழகமாக அண்மையில் தரம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் பல்கலையின் ஆரம்ப நிகழ்வை எதிர்வரும் 16ஆம் திகதி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நிகழ்வில் முதன்மை விருந்தினராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கலந்துகொள்ளவிருந்த நிலையில் நாட்டில் அதிகரித்துள்ள தொற்று காரணமாக அரச நிகழ்வுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த நிகழ்வும் பிற்போடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.