5 12 scaled
இலங்கைசெய்திகள்

நேட்டோவுடன் நேரடி மோதல் ஏற்படும்! அமெரிக்காவின் செயலால் எச்சரிக்கும் ரஷ்யா

Share

நேட்டோவுடன் நேரடி மோதல் ஏற்படும்! அமெரிக்காவின் செயலால் எச்சரிக்கும் ரஷ்யா

அமெரிக்காவின் டிரான்கள்கருங்கடல் மீது அதிகரித்துள்ளதால் நேட்டோவுடன் நேரடி மோதல் ஏற்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, கருங்கடலில் அமெரிக்க டிரோன்களின் ஆத்திரமூட்டல்களுக்கு உடனடி பதிலடி நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரி பெலோசோவ் (Andrei Belousov) அழைப்பு விடுத்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில், ”இதுபோன்ற விமானங்கள் ரஷ்ய வான் மற்றும் விண்வெளிப் படை விமானங்களுடன் வான்வெளி சம்பவங்களின் வாய்ப்பை பெருக்குகின்றன. இது கூட்டணிக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நேரடி மோதலின் அபாயத்தை அதிகரிக்கிறது” என கூறப்பட்டுள்ளது.

மேலும், ரஷ்ய பிரதேசத்தில் உக்ரைன் இலக்குகளைத் தாக்குவதற்கு உதவ, அமெரிக்க விமானங்களைப் பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் உக்ரைனில் உள்ள மோதலில் கீவ் ஆட்சியின் தரப்பில், அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் பெருகிய ஈடுபாட்டை இது எடுத்துக்காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்ய வலைப்பதிவாளர்கள் (Bloggers) ஒரு அமெரிக்க குளோபஸ் ஹாக் உளவு விமானத்தை கருங்கடலில் ஒரு ரஷ்ய போர் விமானம் சுட்டு வீழ்த்தியதாகக் கூறினர்.

Share
தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...