14 15
இலங்கைசெய்திகள்

நூறுக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் : வெளியான காரணம்

Share

நூறுக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் : வெளியான காரணம்

அரசியல் காரணங்களுக்காக அன்றி நீண்ட காலமாக காவல்துறை பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படாமையாலேயே இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக, காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க (Buddhika Manatunga) தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே புத்திக மனதுங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”சில காலங்களாகவே இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டி இருந்தது. மூன்று வருடங்களாக இடமாற்றம் செய்யப்படவில்லை.

இதில் எந்தவொரு அரசியல் காரணங்களும் இல்லை. நாங்கள் சில அதிகாரிகளை சாதாரண பணிகளுக்கு நியமித்துள்ளோம். சில அதிகாரிகளுக்கு நல்ல பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அரசியல் இருப்பதாக யாரும் சொல்ல முடியாது.

இந்த இடமாற்றங்களின் செயல்திறனை ஒரு வருடத்திற்கு நாங்கள் கண்காணிப்போம். பொறுப்பதிகாரிகள் அங்கே சும்மா உட்கார முடியாது. வேலை செய்ய வேண்டும்.

இந்த இடமாற்றங்கள் குறித்து காவல்துறை ஆணைக்குழுவும் (National Police Commission) எங்களிடம் பலமுறை கேட்டதற்கமைய அவர்களின் ஒப்புதலுடன் இது செய்யப்பட்டது.” என தெரிவித்தார்.

இதேவேளை சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான காவல்துறைஅதிகாரிகள் குழு நேற்று (11) இரவு ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட 139 காவல்துறை அதிகாரிகளில் 104 பிரதான காவல்துறை பரிசோதகர்களும், 35 காவல்துறை பரிசோதகர்களும் அடங்குகின்றனர். இந்த இடமாற்றங்கள் பெப்ரவரி 13 மற்றும் 18 ஆம் திகதிகளில் இருந்து நடைமுறைக்கு வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு, காவல்துறை பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றிய 51 அதிகாரிகள் சாதாரண பணிக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் தலைமையக காவல்துறை பரிசோதகர்களாக பணியாற்றிய அதிகாரிகளும் சாதாரண பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
arrest 1200px 28 08 2024 1000x600 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ரூ. 8 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு மதுபானம்: 69 போத்தல்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் கைது!

எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களைச் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்து,...

bb70ef27 25f3 4d2d aac2
உலகம்செய்திகள்

மசகு எண்ணெய் கடத்தல்: ஈரானுக்கு உதவிய வெனிசுலா கப்பல் நிறுவனம், 6 கப்பல்களுக்கு அமெரிக்கா புதிய தடை!

கரீபியன் கடற்பகுதி வழியாக ஈரானுக்கு மசகு எண்ணெய் கடத்திச் செல்ல உதவியதாக வெனிசுலா மீது குற்றம்...

National Strategy child sexual abuse
உலகம்செய்திகள்

இலங்கைப் பிரஜை மீதான சிறுமி கடத்தல், துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள்: மேற்கு லண்டன் நீதிமன்றில் மறுப்பு!

மேற்கு லண்டனில் உள்ள அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட புகலிட விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 20...

articles2FxGu0xvsmkR7xnWvm5gj0
செய்திகள்விளையாட்டு

மறுநாள் ஜோன் சினாவின் கடைசி WWE போட்டி: குந்தரை எதிர்கொள்கிறார் ஜாம்பவான்!

மல்யுத்த வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான WWE ஜாம்பவான் ஜோன் சினா, தனது புகழ்பெற்ற இரண்டு...