7 27
இலங்கை

தேர்தலை முன்னிட்டு நாட்டில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு திட்டங்கள்

Share

தேர்தலை முன்னிட்டு நாட்டில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு திட்டங்கள்

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ (Nihal Taltuwa)தெரிவித்துள்ளார்.

சுமூகமான மற்றும் பாதுகாப்பான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக சுமார் 63,000 காவல்துறை உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினருக்கு மேலதிகமாக முக்கிய பாதுகாப்பு இடங்களில் முப்படையினரைச் சேர்ந்த பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதை பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

ஒழுங்கு மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்குத் தேவையான மேலதிகப் பணியாளர்களை ஈடுபடுத்துவதற்கு ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பாதுகாப்பு நடவடிக்கைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.

இதேவேளை, தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வன்முறை வெடித்தால் அது கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்(Tiran Alles) இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...

image 1200x800 14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜனாதிபதியை அவதூறாகப் பேசிய 5 பேர் கைது! – கடமையில் தவறிய மத்தல பொலிஸ் அதிகாரிகளுக்குத் திடீர் இடமாற்றம்!

மத்தல அதிவேக வீதி நுழைவாயிலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அந்த...