அவிசாவளை, தல்துவ – அமிதிரிகல வீதியில் இன்று (08) கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற பயங்கர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அதிவேகமாக வந்த காரும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த பள்ளத்தாக்கு ஒன்றில் கவிழ்ந்தது. அதேவேளை, மோட்டார் சைக்கிள் திடீரெனத் தீப்பற்றி எரிந்து முற்றாகச் சேதமடைந்தது.
விபத்தில் சிக்கிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த ஏனைய நபர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிவேகமாக வாகனத்தை செலுத்தியதே விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், தல்துவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.