17 20
இலங்கை

தலதா மாளிகையை ட்ரோன் மூலம் புகைப்படம் எடுத்தவர் கைது

Share

தலதா மாளிகையை ட்ரோன் மூலம் புகைப்படம் எடுத்தவர் கைது

கண்டியில்(Kandy) நடைபெற்ற இறுதி ரந்தோலி பெரஹரவை ஆளில்லா ட்ரோன் கருவி மூலம் புகைப்படம் எடுத்ததற்காக ரசங்க திஸாநாயக்க என்ற திருமண புகைப்படக் கலைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலதா மாளிகைக்கு மேலே ஆளில்லா விமானம் பறந்ததைக் கண்டறிந்த  இலங்கை விமானப்படை வீரர்கள், அந்த ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதுடன், அதன் உரிமையாளரான புகைப்பட கலைஞரையும் கைது செய்தனர்.

தலதா மாளிகைக்கு மேலே அனுமதியின்றி ட்ரோன் கருவிகளை பயன்படுத்துவது ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

ரந்தோலி பெரஹெராவின் மூன்றாவது நாளிலும் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தியதற்காக இருவர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...