தபால் திணைக்களத்தில் ஏற்படவுள்ள பல மாற்றங்கள் - கிடைக்கவுள்ள நன்மைகள்
இலங்கைசெய்திகள்

தபால் திணைக்களத்தில் ஏற்படவுள்ள பல மாற்றங்கள் – கிடைக்கவுள்ள நன்மைகள்

Share

தபால் திணைக்களத்தில் ஏற்படவுள்ள பல மாற்றங்கள் – கிடைக்கவுள்ள நன்மைகள்

தபால் திணைக்களம் முழுமையாக நவீனமயப்படுத்தப்படவுள்ளது. இதற்கான நகல் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

தனியார் மற்றும் அரச துறைகள் இணைந்த செயற்றிட்டமாக இந்த நவீனப்படுத்தல் செயற்பாடு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆயிரம் கோடி ரூபா செலவிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ராஜாங்க அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

டிஜிட்டல் மயப்படுத்துவதன் மூலம் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் தபால்துறை லாபமீட்டும் நிலைக்கு மாற்றியமைக்கப்படும்.

இந்த வருட இறுதிக்குள் தபால் துறையின் நட்டத்தை 300 கோடி ரூபாவால் குறைப்பதற்கும் அடுத்த வருடமளவில் வருமானத்திற்கும் செலவினத்திற்கும் இடையிலான இடைவெளியை சமப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டளவில் தொடர்ந்தும் திறைசேரியில் தங்கியிருக்காத தபால்துறையை கட்டியெழுப்புவது தமது இலக்காகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...