10 56
இலங்கைசெய்திகள்

ஜப்பானில் கிடைக்கப்போகும் வேலைவாய்ப்புகள்: மக்களுக்கு வெளியான நற்செய்தி

Share

ஜப்பானில் (Japan) தாதியர் பணிகளுக்காக இலங்கை தொழிலாளர்களின் பயிற்சிக் குழுவை நியமிப்பதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் ஐ.எம். ஜப்பான் (IM Japan) இடையேயான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் தாதியர் வேலைத் துறையில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிடங்கள் காணப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தவிசாளர் கோசல விக்ரமசிங்க மற்றும் ஐஎம் ஜப்பானின் தவிசாளர் கனமோரி ஹிட்டோஷி ஆகியோருக்கு இடையே இலங்கையர்களை ஜப்பானில் வேலைக்கு அனுப்புவதற்கான எதிர்கால ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தவிசாளர் கோசல விக்ரமசிங்க, இலங்கைக்கு தாதியர் துறையைத் தவிர வேறு துறைகளிலும் வேலைவாய்ப்புகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜப்பானிய பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதனை தொடர்ந்து, எதிர்காலத்தில் இலங்கைக்கு அதிகமான ஜப்பானிய வேலை வாய்ப்புகளை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கனமோரி ஹிடோஷியும் உறுதியளித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...