அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலைக்கு (Chilaw General Hospital) ரூ. 1,200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நேற்று (டிசம்பர் 12) குறித்த வைத்தியசாலைக்குக் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
வைத்தியசாலையின் சாதாரண சிகிச்சை சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கச் சுமார் ரூ. 1,200 மில்லியன் செலவாகும் என்று அங்குக் கணிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் விடுதித் தொகுதியை அடுத்த வருடம் (2026) நவம்பர் மாதமளவில் நிறைவு செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், அவசர விபத்து மற்றும் சிகிச்சை கட்டடத் தொகுதியை 2 வருட காலப்பகுதிக்குள் துரிதமாக நிர்மாணிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
நிர்மாணப் பணிகளைத் துரிதப்படுத்தி, வைத்தியசாலையை முன்னைய நிலையை விட உயரிய நிலைக்குக் கொண்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சிலாபம் நகர மத்தியில் 7.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த வைத்தியசாலை, புத்தளம் மாவட்டத்தின் பிரதான அரச வைத்தியசாலையாகும்.
இங்கு ஆயிரத்திற்கும் அண்மித்த சுகாதார ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதன் கட்டில் கொள்ளளவு 645 இக்கும் அதிகமாகும்.