சிறைச்சாலைகள் மற்றும் கைதிகள் தொடர்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்.

parlimen president 1

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், சிறைச்சாலைகளில் நிலவும் நிலைமை மற்றும் கைதிகளின் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக மறுஆய்வு செய்யும் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மேலும், நாட்டிலுள்ள 33 சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளின் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களின் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் அவசர சூழ்நிலைகளின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்வதற்கு ஒரு கூட்டுப் பொறிமுறையை உருவாக்கவும் இங்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, 33 சிறைச்சாலைகளுக்கும் பொருந்தும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் முப்படையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய கூட்டுப் பொறிமுறை ஒன்று எதிர்வரும் வாரத்தில் உருவாக்கப்படவுள்ளதுடன், அவர்கள் சிறைக்கைதிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version