3 8
இலங்கைசெய்திகள்

சபையில் அர்ச்சுனா எம்.பி அதிரடி – ஹன்சார்ட்டில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள்

Share

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) நாடாளுமன்ற நிர்வாகத்தினரின் பொறுப்பற்ற செயல் குறித்து தான் வெட்கப்படுவதுடன் சபாநாயகரின் செயலை நினைத்து வெட்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அர்ச்சுனா பேசிய தகாத வார்த்தைகளை ஹன்சார்ட்டில் இருந்து நீக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) பிரதி சபாநாயகரை நோக்கி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தார்.

இதேவேளை குறுக்கிட்ட இராமநாதன் அர்ச்சுனா தயாசிறி ஜயசேகர பயன்படுத்திய தகாத வார்த்தைகள் குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த வார்த்தையை ஹன்சார்ட்டில் இருந்து நீக்குமாறு பிரதி சபாநாயகர் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...