2 41
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாபய வழியில் பயணிக்கும் அநுர குமார: ஒப்பிடும் முன்னாள் எம்.பி

Share

கோட்டாபய வழியில் பயணிக்கும் அநுர குமார: ஒப்பிடும் முன்னாள் எம்.பி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய (gotabaya) செய்ததை, தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார செய்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே (mahindananda aluthgamage) தெரிவித்தார்.

கோட்டாபய ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்த 993 வாகனங்களை வேறு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளித்தார், ஜனாதிபதி அலுவலகத்தில் மதிய உணவு நேரத்தை குறைத்தார், பாலுக்கு பதிலாக தேநீர், வழங்கினார் ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்தார் என அளுத்கமகே தெரிவித்தார்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் அரசாங்கம் அமைக்கப்பட்ட போது மக்கள் இருந்ததாகவும்,ஆனால் ​​அரசாங்கத்தை நடத்துவது மிகவும் கடினமாக இருந்ததாக தெரிவித்த அளுத்கமகே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இதே நிலையே ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு (ranil wickremesinghe)ஆதரவான அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி பரந்த கூட்டணியை உருவாக்கி பொதுத் தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியை கட்டியெழுப்புவேன் என அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்படும் எனவும் அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...