கொஹுவலை, சரணங்கர வீதிக்கு அருகிலுள்ள போதியவத்த பகுதியில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுமி படுகாயமடைந்த நிலையில், உடனடியாக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த கொஹுவலை பொலிஸார், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் யார்? மற்றும் தாக்குதலுக்கான பின்னணி என்ன என்பது குறித்துக் கண்டறிய சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.