கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தங்கத்தை பஸ்ஸில் கடத்திச் சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
6கிலோ நிறையுடைய இத்தங்கத்தின் பெறுமதி 120 மில்லியன் எனவும் இச்சம்பவத்தில் வெள்ளம்பிடியைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தங்கம் இலங்கை கடற்பரப்பின் ஊடாக யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு கடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
#SrilankaNEws