முட்டை விலை
இலங்கைசெய்திகள்

குறைக்கப்படவுள்ள முட்டை விலை: வெளியான அறிவிப்பு

Share

குறைக்கப்படவுள்ள முட்டை விலை : வெளியான அறிவிப்பு

உள்நாட்டு வெள்ளை மற்றும் சிவப்பு முட்டையின் சில்லறை விலை 55 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டைக்கான நிர்ணய விலை நீக்கப்பட்டுள்ளமை காரணமாக முட்டை விலை குறைவடையும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளது.

மேலும், முட்டைக்கு விதிக்கப்பட்டிருந்த நிர்ணய விலை நேற்று (25.07.2023) நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்திருந்த நிலையியே இவ் அறிவித்தல் வெளியாகியுள்ளது.

போட்டித் தன்மையில் விலை நிர்ணயம்
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள், லங்கா சதொச நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் 35 ரூபா என்ற புதிய விலையில் விற்பனை செய்யப்படுவதோடு, பொதி செய்யப்பட்ட முட்டைகள் 40 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படுகின்றன.

இறக்குமதி செய்யப்பட்ட முட்டையை சந்தைக்கு விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், போட்டித் தன்மையில் விலையை தீர்மானிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...